காங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம்(6) மாலை சந்தேகத்திற்கு இடமாக படகு ஒன்று நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனை இட்டுள்ளனர்.
இதன் போது அந்த படகில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்ட்டிருந்த சுமார் 37 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கபட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அப்படகில் மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் தெல்லிப்பளையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மீட்கபட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(6) மாலை சந்தேகத்திற்கு இடமாக படகு ஒன்று நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனை இட்டுள்ளனர்.
இதன் போது அந்த படகில் இரு பொதிகளில் மறைத்து வைக்கப்ட்டிருந்த சுமார் 37 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கபட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அப்படகில் மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் தெல்லிப்பளையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மீட்கபட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment