![]() |
விஜய் 62: படக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிசன்! |
மெர்சல்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படம்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு கூட படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதை யாரோ மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது நடிகர் விஜய் மீண்டும் ஒரு போட்டோ ஷீட் ஒரு எடுக்க உள்ளார். இந்த விசயம் லீக்காகி விடக்கூடாது என்பதற்காக ஷீட்டிங் ஸ்பாட்டில் விஜய் தன்னை யாரும் படம் பிடிக்கக்கூடாது, மொபைல் பயன்படுத்தக்கூடாது என ஸ்டிரிக்டான கண்டிஷன் போட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment