சுமூகமான முறையில் தேர்தல் -ககே அமைப்பு- - Yarl Voice சுமூகமான முறையில் தேர்தல் -ககே அமைப்பு- - Yarl Voice

சுமூகமான முறையில் தேர்தல் -ககே அமைப்பு-

நாடு முழுவதும் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலானது நடைபெறுவதில் சமூகமான நிலமை காணப்படுவதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தேர்தல் வாக்களிப்பு தினத்திற்கு முன்னதான நிலமைகளை கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது, இம் முறை இத் தேர்தலானது சுமூகமான நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் நிறைவடைந்து வாக்களிப்பதற்கு முன்னதான 48 மணி நேரத்திற்குள் இம் முறை பாரிய சட்டவிரோத பிரச்சாரங்களோ வன்முறை சம்பவங்களோ பெரிதளவில் பதிவாகவில்லை. இவ்வாறான நிலையில் இப் புதிய தேர்தலானது சாதகமானதாகவே உள்ளது.

ஆனாலும்  பிரச்சார கால எல்லையானது நிறைவடைந்த பிற்பாடு சில இடங்களில் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாகவே இருந்த்து. ஆனால் கடந்த காலத்தில் விருப்பு வாக்கு காரணமாக ஒரே கட்சிக்குள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக்கொண்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் அத்தகைய எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் காணப்படாத நிலையில் தேர்தல் தினத்துக்கு முன்னதான சுழலானது சமூக காணப்படுவதுடன் இம்முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் நாடு முழுவதும் 5 ஆயிரம் தொண்டர்களை தாம் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post