முல்லையில் புலிகளின் தங்கம் தேடும் அகழ்வு தேல்வி - Yarl Voice முல்லையில் புலிகளின் தங்கம் தேடும் அகழ்வு தேல்வி - Yarl Voice

முல்லையில் புலிகளின் தங்கம் தேடும் அகழ்வு தேல்வி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து நடைபெற்ற அகழ்வுப்பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படை கடற்ப்படை ஆகியோர் இணைந்து  கடந்த மாதம்  17 ம் திகதி மாலை  அகழ்வுப்பணி இடம்பெற்றது. அவ் அகழ்வுகள் டைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் கடற்ப்படை ஆகியோர் இணைந்து இந்த அகழ்வுப்பணியினை முன்னெடுத்தனர். இருப்பினும் தங்கம் எவையும் அகழ்வின் போது கிடைக்கவில்லை.


0/Post a Comment/Comments

Previous Post Next Post