வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் நினைவாலயத்தை துப்பரவு செய்தவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் - Yarl Voice வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் நினைவாலயத்தை துப்பரவு செய்தவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் - Yarl Voice

வல்வெட்டிதுறை தீருவில் மாவீரர் நினைவாலயத்தை துப்பரவு செய்தவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்


யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள 12 மாவீரர்களின் தீருவில் நினைவாலயப் பகுதியை று இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்தவர்கள் பொலிஸாரினால் அச்சுறத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நினைவாலயத்தினை துப்பரவு செய்து கொண்டிருந்தவர்கள் மத்தியல் வந்திறங்கிய பொலிஸார் அங்கு துப்பரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் அவர்கள் வந்த வாகனங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் செய்து அச்சு றுத்தியுள்ளனர்.

குமரப்பா புலெந்திரன் உட்பட 12 மாவீரர்களின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

அதன்போது நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொது மைதானத்தை துப்புரவு செய்வதை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார்.

எனினும் தவிசாளரின் முடிவின் அடிப்படையிலேயே துப்புரவு பணி இடம்பெறுவதாகவும் தன்னால் அதனைத் தடுக்க முடியாது என்றும் செயலாளர் பொலிஸ் அதிகாரிக்கு பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் பொது மைதானத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோரை ஒவ்வொருவராக வீடியோப் பதிவு செய்துள்ளனர்.

ஏங்களை ஏன் வீடியோ எடுக்கின்றீர்கள் என்று பொலிஸாரிடம் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் கேட்ட போது அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பிற்கு அமையவே தான் வீயோ பதிவு செய்வதாக தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post