தமது ஆட்சியில் ஊடகங்களுக்கு எந்தவித தாக்கங்களும் ஏற்படாது - ஊடக பிரதானிகளிடம் கோத்தபாய
தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஊடக பிரதானிகளுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கும் நாட்டின் நற்பெயருக்கும் பயனளிக்கும் ஒரு ஊடக சேவையில் ஈடுபடுவதன் மூலம் அனைத்து ஊடக நிறுவனங்களும் நாட்டிற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
Post a Comment