தொண்டமனாறு நீரேரியில் நீராடிய இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு - Yarl Voice தொண்டமனாறு நீரேரியில் நீராடிய இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு - Yarl Voice

தொண்டமனாறு நீரேரியில் நீராடிய இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு



யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடல் நீரேரியில் நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் என்ற 26 வயதுடைய இளைஞரே நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்வம் தொடர்பாக தெரிய வருவதாவது..

தொண்டமனாறு நீரேரியில் ஐந்த இளைஞர்கள் நீராடியுள்ளனர். இதன் போது ஒரு இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடற்படை மற்றும் பொது மக்கள் குறித்த இளைஞரை மீட்க நீண்ட நேரமாகத் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

இவ்வாறு நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post