பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் பந்துல - Yarl Voice பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் பந்துல - Yarl Voice

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் பந்துல

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்இ உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

குறித்த குழுவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுக்இ முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரியஇ பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர்இ கலாநிதி வணக்கத்திற்கு பெனட் சாந்த அடிகளார்இ கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் ஆகியோர் அங்கத்தவர்களாகச் செயற்பட உள்ளனர்.

இதன் அமைப்பாளரும் செயலாளருமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post