பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் புங்குடுதீவில் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் புங்குடுதீவில் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice

பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் புங்குடுதீவில் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை


புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் .

பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார்  குறிப்பிட்டனர்.

குழந்தை பிறந்து 2 நாள்கள் இருக்கும். மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுகிறது .கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.
எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக கலண்ட நிலையில் சடலம் காணப்பட்டது .

இன்று காலை அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள்  சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்' என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .

சிசுவின் சடலம் தொடர்பில்  புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

சிசுவின் தாயார்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
.
 கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post