வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பேன் - புதிய ஆளுநர் சாள்ஸ் - Yarl Voice வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பேன் - புதிய ஆளுநர் சாள்ஸ் - Yarl Voice

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பேன் - புதிய ஆளுநர் சாள்ஸ்

வடக்கு மாகாண புதிய ஆளுநர்  எச்.எம்.சாள்ஸ் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

புதிய ஆளுநராக கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்று தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆயரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் கோது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் வடக்கில் மதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க தன்னாலான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post