இரானுவம் காணிகளை விடுவித்தாலும் குடியமர்வதில் மக்கள் ஆர்வம் இல்லை - யாழ் மாவட்ட தளபதி குற்றச்சாட்டு - Yarl Voice இரானுவம் காணிகளை விடுவித்தாலும் குடியமர்வதில் மக்கள் ஆர்வம் இல்லை - யாழ் மாவட்ட தளபதி குற்றச்சாட்டு - Yarl Voice

இரானுவம் காணிகளை விடுவித்தாலும் குடியமர்வதில் மக்கள் ஆர்வம் இல்லை - யாழ் மாவட்ட தளபதி குற்றச்சாட்டு

யாழ் மாவட்டத்தில்  இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனர் என யாழ்  மாவட்ட இராணுவகட்டளைத்தளபதி குற்றஞ்சாட்டியுள்ளார்

தொடர்ச்சியாக பொதுமக்களின் காணிகளை விடுவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வீடுகளை அமைத்து கொடுக்கவும் இராணுவம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கு காணி உரிமையாளர்கள் அக்கறை இல்லாது காணப்படுவதாக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி கட்டளைத் தலமையகத்தில் இன்றையதினம்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எதிர்வரும் காலங்களில் காணி விடுவிப்பு தொடர்பாக ஏதாவது முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின் றனவா?   என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 இதுவரையான காலப்பகுதியில் ராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டு  இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இராணுவத்தினரின் பாவனையில் இருந்து 8800 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விடுவிக்கப்பட்ட  காணிகளில் 4770 ஏக்கர் காணிகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அவை தொடர்ந்தும் மக்கள் பயன்படுத்தாத நிலையில் அக்கா ஆணிகள் பற்றைகாடுகளாக காணப்படுகின்றன.

காணிகளை விடுவிக்குமாறு போராட்டங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீள குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என கவலை தெரிவித்தார். குறிப்பாக 4770 ஏக்கர் காணி தொடர்ந்தும் காடும் பற்றைகளுமாக கவனிப்பாரற்றும் காணப்படுகிறது. இது எமக்கு வேதனை அளிக்கின்றது. 

யாழ் மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். இதுவரை நூற்றுக்கு அதிகமான வீடுகளை கட்டி வழங்கியுள்ளோம். அது போல் மாணவர்களின் கல்வித்தேவைக்கு 5500க்கு அதிகமான துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளோம்.

இராணுவம் எந்த எதிர்பார்ப்பும் இன்றியே இதனை செய்து வருகின்றது. இன்றும் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். குறிப்பாக  பொதுமக்களின் காணிகளை முற்றாக விடுவிப்பதற்கு நாங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னோக்கி செய்து வருகின்றோம். 

ஆனால் காணி உரிமையாளர்கள் வந்து மீளக்குடியமரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நான் நினைக்கின்றேன் காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.  விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீளகுடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளது என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post