யாழில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு - Yarl Voice யாழில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு - Yarl Voice

யாழில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 72வது சுதந்திர தினம் நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தின் இன்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதமம் இசைக்கப்பட்டு  தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஏற்றிவைத்துள்ளார்.

தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரை இடம்பெற்றுஇ மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பழைய பூங்காவில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post