அரசில் அபிலாசைகள் எனக்கும் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை - ஓய்வுபெற்றுச் செல்லும் அரச அதிபர் வேதநாயகம் - Yarl Voice அரசில் அபிலாசைகள் எனக்கும் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை - ஓய்வுபெற்றுச் செல்லும் அரச அதிபர் வேதநாயகம் - Yarl Voice

அரசில் அபிலாசைகள் எனக்கும் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை - ஓய்வுபெற்றுச் செல்லும் அரச அதிபர் வேதநாயகம்

அரசியல் அபிலாசைகள் இருக்கின்றதே தவிர தான் ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்ல எனவும் தான் எந்தவொரு அரசியல் கட்சி சார்பாக நடக்கவும் அல்ல என ஓய்வு பெற்று செல்லும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தனது சேவையினை தான் நேர்மையாகவே செய்ததாகவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும் என நா.வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

பலர் வந்து தான்னிடம் தேர்தலில் போட்டியிட போகின்றீர்களா என கேட்டதாகவும் அவ்வாறு ஒரு முடிவு தன்னிடம் இல்லை எனவும் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தனது ஓய்வை அறிவித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தின் பிரிவுபசார நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தம்பதியினர் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு பொன்நாடை போர்த்திஇ நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து கலந்துகொண்ட உத்தியோகத்தர்களும் பொன்நாடை போர்த்தி வாழ்த்து  மடல்களை வழங்கி ஒய்வு பெற்று செல்லும் அரசாங்க அதிபரை கௌரவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் ஊரையாற்றும் போதே நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக நாகலிங்கம் வேதநாயகன் தனது கடமையினை பொறுப்பேற்றிருந்தார்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலாளர்கள் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து  கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post