யாழ் போதனா வைத்தியசாலையில் முதன் முதலாக நடந்த அதிசயம் - மகிழ்ச்சியில் பெற்றோர் - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலையில் முதன் முதலாக நடந்த அதிசயம் - மகிழ்ச்சியில் பெற்றோர் - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலையில் முதன் முதலாக நடந்த அதிசயம் - மகிழ்ச்சியில் பெற்றோர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் தேதி பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜமுனாநந்தா தெரிவித்தார். 

கிருஷ்ண பவன்  கீர்த்திகா தம்பதிகளுக்கு இவ்வாறு நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தெல்லிப்பழை கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருமதி கீர்த்திகா தம்பதிகள் திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

கடந்த வருடம் கருவுற்றிருந்த. கீர்த்திகா அவர்கள் கடந்த 2 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகாவுக்கு அன்றைய இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில் மூன்று ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாக போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார்.

தற்போது குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்திய நிபுணர் ஜெயபாலன் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகள் தொடர்ந்தும் வைத்தியசாலை வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்கள் வெகு விரைவில் வீடு செல்லக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் வைத்தியர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 குழந்தைகள் ஒரு பிரசவத்தின் மூலம் பெறப்பட்ட இதுவே முதல் தடவை என வைத்திய நிபுணர் ஜெயபாலன் மகிழ்ச்சி வெளியிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post