யாழில் கொரோனா தொற்று இல்லை - சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவரும் விடுவிப்பு - Yarl Voice யாழில் கொரோனா தொற்று இல்லை - சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவரும் விடுவிப்பு - Yarl Voice

யாழில் கொரோனா தொற்று இல்லை - சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவரும் விடுவிப்பு

கொரோனோ வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகளின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகை உலுக்கி வரும் கொரோனோ தொற்று தாக்கம் இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது. இதனடிப்படையில் 18 பேர் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேசத்தில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதே போல ஏனைய வைத்திசாலைகளிலும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனோ வைரஸ் தொடர்பில் பொது மக்கள் மத்தயில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post