புலிகள் அழிவிற்கு கருணா என்றால் கூட்டமைப்பு அழிவிற்கு சுமந்திரன் காரணகர்த்தா - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice புலிகள் அழிவிற்கு கருணா என்றால் கூட்டமைப்பு அழிவிற்கு சுமந்திரன் காரணகர்த்தா - சுரேஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

புலிகள் அழிவிற்கு கருணா என்றால் கூட்டமைப்பு அழிவிற்கு சுமந்திரன் காரணகர்த்தா - சுரேஸ் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு கருணா எவ்வளவு தூரம் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதே போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்கும் சுமந்திரன் காரண கர்த்தாவாக இருந்தார். அது மத்திரமல்ல இன்றைக்கு தமிழரசுக் கட்சியின் அழிவிற்கு கூட சுமந்திரனே காரணகர்த்தாவாக இருக்கின்றார்.

இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசுக் கட்சியில் இருந்தும் பலர் வெளியெறுவதற்கு சுமந்திரனே காரணமென்றும் இந்தத் தமிழ்க் கட்சிகளை அழிப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியால் அவர் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கட்டப்பிராயிலுள்ள தனது இல்லத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாகவே அந்தக் கட்சியின் மகளீர் அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டு என்பது நிதர்சனமான உண்மை. அது இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

அதாவது; ஐதேகவால் தான் கொண்டு வரப்பட்ட ஒருவர் தான் சுமந்திரன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. குறிப்பாக கொழும்பில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மட்டத்திலும் அதே போல கூட்டமைப்பிலுள்ள பருக்கும் இது தெரிந்திருந்தது. அவ்வாறாக அவர் கூடு;டமைப்பிற்குள் வந்த பின்னர் தான் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியிருந்தனர். அதே போல இன்றைக்கு தமிழரசுக் கட்சியிலிருந்தம் பலரும் வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் சிதைவதற்கு இன்னும் சொல்லப் போனால் அழிவதற்கு சுமந்திரனெ காரணகர்த்தாவாக இருக்கின்றார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் இலங்கையில் இவ்வாறான கட்சிகள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில் அதனை முடிவிற்கு கொண்டு வருவதற்காகவே சிந்திக்கின்றதாகவே கருதுகிறோம்.

குறிப்பாக புலிகளுடைய அழிவிற்கு கருணா என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வளவு தூரம் காரணகர்த்தாவாக இருந்தாரோ அதேபோல கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் அழிவிற்கு சுமந்திரனும் நிச்சயமாக காரணகர்த்தாவாகவே இருக்கின்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post