இதன்போது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை றஜீவ் ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு பத்திரத்திர் முன்னாள் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்னிலையில் இன்றையதினம் கையப்பமிட்டுள்ளனர்.
தொடர்ந்து வாசுதேவ நாணயக்காரவின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமேயானால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை தவிர நாங்கள் எந்த விதத்திலும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தர முடியாது.
அதே போல் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை எனினும் நாங்கள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
அதற்கு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடும் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்
Post a Comment