இலங்கையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனோ - தொற்றாளர் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு - Yarl Voice இலங்கையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனோ - தொற்றாளர் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு - Yarl Voice

இலங்கையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனோ - தொற்றாளர் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு

இலங்கையில் இன்று மட்டும் பதினைந்து பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இணங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரொனோ வைரஸ் தொற்றால் ஏற்கனவே 254 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்று அடையாளம் காப்பட்ட 15 பேருடன் சேர்த்து 269 பேராக அதிகரித்துள்ளது.

கொழும்பில் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே கொரோனோ அடையாளம் காணப்பட்டள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

இதே வேளை கொரோனோ தொற்று அடையாளம் காணப்பட்ட 171 பேர் தற்போதும் சிகிச்சை வருகின்றதுடன் 91 பேர் கொரோனோவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post