கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 888 பேர் பிரிட்டனில் உயிரிழப்பு - Yarl Voice கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 888 பேர் பிரிட்டனில் உயிரிழப்பு - Yarl Voice

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 888 பேர் பிரிட்டனில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  கடந்த 24 மணித்தியாலத்தில் இங்கிலாந்து மருத்துவ மனைகளில் 888 பேர் மரணமாகி உள்ளதாக  NHS தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையுடன் கொரோனா-19 பரவுகை ஆரம்பித்ததில் இருந்து பிரிட்டனின் மொத்த மரணங்கள் 15464 ஆக உயர்ந்துள்ளது இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றிய வைரஸ் தாக்கத்தினால் உலக நாடுகளில் மரணமாணவர்களின் தொகையில் ஐந்தாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். உலகளவில் இதுவரை சுமார் 150000 பேர் மரணித்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கான சோதனைகளின் எண்ணிக்கை 460437 ஆக உயர்ந்துள்ளது இருப்பினும் இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரிட்டனில் 114217 நேர்மறை சோதனைகள் நடந்துள்ளன.

இங்கிலாந்து ஸ்காட்லாந்து வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகளும் தங்களது சொந்த தினசரி புள்ளிவிவரங்களை பதிவு செய்கிறார்கள் இது நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தங்கள் எண்ணிக்கையை இணைத்துக்கொள்வதால் சில வேளைகளில் அரசாங்கத்தின் மொத்த எண்ணிக்கையுடன் பொருந்தாத நிலையும் காணப்படுகின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post