கொரோனா வைரஸ் அபாய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் வரும் திங்களன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கை தளர்த்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் நாளை மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மே முதலாம் திகதி மீண்டும் இரவு 8 மணிதொடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment