ஊரடங்கு சட்ட நடைமுறை குறித்தான அரசின் புதிய அறிவிப்பு - Yarl Voice ஊரடங்கு சட்ட நடைமுறை குறித்தான அரசின் புதிய அறிவிப்பு - Yarl Voice

ஊரடங்கு சட்ட நடைமுறை குறித்தான அரசின் புதிய அறிவிப்பு


நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊருடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை இன்று விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் அபாய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் வரும் திங்களன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கை தளர்த்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஏனைய மாவட்டங்களில் நாளை மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மே முதலாம் திகதி மீண்டும் இரவு 8 மணிதொடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post