ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல் - யாழ் ஊடக அமையத்தில் - Yarl Voice ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல் - யாழ் ஊடக அமையத்தில் - Yarl Voice

ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல் - யாழ் ஊடக அமையத்தில்


படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பி

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள், மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் நலம் பெற வேண்டியும் .கொரோனோ தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post