யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களுக்கு தியாகேந்திரன் உதவி - Yarl Voice யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களுக்கு தியாகேந்திரன் உதவி - Yarl Voice

யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களுக்கு தியாகேந்திரன் உதவி

யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும்  தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர்  வாமதேவன் தியாகேந்திரன் ஏற்று அவர்களை வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க உதவியுள்ளார்.

கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்கு போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்கு செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதாவது மட்டக்களப்பு மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்கு போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார். மேலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்ததும் பயணத்துக்கான செலவையும் இவரே ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிதியத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது மட்டுமல்ல கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு இதுவரை ஒரு கோடி ரூபாவையும் வழங்கியுள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post