கொரோனோ ஆபத்து நெருக்கடியில் தேர்தலை நடாத்துவது பொருத்தமில்லை - கர்தினால் சுட்டிக்காட்டு - Yarl Voice கொரோனோ ஆபத்து நெருக்கடியில் தேர்தலை நடாத்துவது பொருத்தமில்லை - கர்தினால் சுட்டிக்காட்டு - Yarl Voice

கொரோனோ ஆபத்து நெருக்கடியில் தேர்தலை நடாத்துவது பொருத்தமில்லை - கர்தினால் சுட்டிக்காட்டு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறந்த செயற்பாடாக அமையாது என்று கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு பொறளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர்இ கொரோனா அச்சுறுத்தலில் இருந்து முதலில் நாடு விடுதலையடையட்டும். அதன் பின்னர் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும். அதுவரை அரசாங்கம் பொறுமையோடு இருக்கத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post