யாழில் 52 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் 52 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் 52 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழில் இன்றையதினம் 52 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஒருவருக்கும் தொற்றில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 52 பேருக்கான ஊழுஏஐனு - 19  பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும்  கொரோனா  தொற்று இல்லையென  உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

 போதனா வைத்தியசாலை  - 5 பேர்.

 போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.

பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 3 பேர்.

பொது வைத்தியசாலை மன்னர் - 2 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர்.

 விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் -  36 பேர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post