யாழில் இன்று நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice யாழில் இன்று நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழில் இன்று நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


 இன்று 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர் ( ஒருவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்)

* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்
[ads id="ads1"]
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வவுனியா - ஒருவர்

* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய்  - ஒருவர் (மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்)

* யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 6 பேர் . இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.  இன்றைய  பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலிலில் இருக்கவேண்டும்.
அத்துடன் இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிய தந்துள்ளனர்.
ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
[ads id="ads2"]
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய்  - ஒருவர் (மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும்)

* பம்பைமடு தனிமைப்படுத்தல் மையம் - 11 பேர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post