பிரமருடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கடந்த மாதம் 30 ஆம் திகதி பிரதமரினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் ஆராய்ந்திருந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளதும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு மேலாக நாங்கள் கூட்டமைப்பாக எமது கட்சி உறுப்பினர்களிடத்திலும் ஆற்றல் அறிவு படைத்த கல்விமான்கள் புது;திஐpவிகள் எனப் பல தரப்பினர்களுடன் இந்த விடயம் குறித்து பேசியிருந்தோம்.
அவ்வாறு நாங்கள் ஆராய்ந்து அனைவரதும் முடிவாக கூட்டத்திற்குப் போவதெனத் தீர்மானமொன்றை எடுத்திருந்தோம். அதற்கமையவே நாங்கள் கூட்டத்திற்கும் சென்று தற்போதைய நிலைமைகள் மற்றும் எமது மக்களின் இனப்பிரச்சனைக்காக தீர:வு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் பேசியிருக்கின்றோம்.
இதே நேரம் எதிர்க்கட்சிகளும் அந்தக் கூட்டத்திற்குப் போவதாகவே முன்னர் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் போகவில்லை என அறிவித்திருந்தனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியோ சஐpத் பிரேமதாசா தரப்பினரோ போகவில்லை என்பதால் அதனை நாங்கள் பொருட்படுத்தாமல் நாங்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் சென்று எமது மக்களின் பிரச்சனைகள் தேவைகளை எடுத்துக் கூறியிகே;கின்றோம்.
கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த அந்த தீர்மானம் இன்றைக்கு உலக ரீதியாகவே பலரும் வரவேற்றிருக்கின்றார். எமது இந்த அனுகுமுறையை அல்லது நிலைப்பாட்டை பலரும் ஆதரித்து எமக்கு பாராட்டுக்களைக் கூட தெரிவித்து வருகின்ற நிலைமை இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகள் தங்கள் கட்சி நலனின் அடிப்படையில் கூட்டத்திற்கு செல்லவதில்லை என தீர்மானித்திருக்கலாம்.
ஆனாலும் நாங்கள் போயிருந்தோம். அ;வாறு போனதால் எங்களுக்கு எந்தவிதமான நலன்களுக்கும் அங்கு இடமிருக்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சியாகச் செயற்பட்டாலும் அரசிற்கு ஆதரவு வழங்க ஆயத்தமாக இருந்த நிலையில் இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பை கைவிடுவதற்கு எந்தவிதமான காரணமும் இருக்கவில்லை.
எதிர்க்கட்சிகளுடைய தீர்மானத்தை பிரதிபலித்திருந்தோம். பாரர்ளுமன்றத்தைக் கூட்டுமர்று வற்புறுத்தியிருந்தோம். ஆனாலும் நாங்கள் இணைந்துள்ள 3 கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை அனுப்பி வைக்க ஆயத்தமாக இருந்தோம். அதில் நாங்கள் பேசி ஒரு முடிவெடுத்தோம். அத்தோடு சம்மந்தன் அவர்கள் சுமந்திரனையும் அழைத்துக் கொண்டு சென்று பல விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையைக் கொடுத்தார்.
இரானுவமே நிர்வாக ரீதியாக ஆட்சி செய்கின்ற இந் நேரத்தில் வடக்கு கிழக்கு முழுவதுமே அவர்களது தலைமைத்தவத்தில் ஆட்சி நடக்கின்ற நேரத்தில் நாங்கள் அப்படியொரு அழைப்பு சந்தர்ப்பம் வந்த போது நாங்கள் எங்களுக்குரிய தனித்துவமான பல பிரச்சனைகள் இருந்தன் அடிப்படையில் சென்று அது குறித்து பேசியிரந்தோம்.
உதாரணமாக இனப்பிரச்சனையை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை. எங்களுடைய பிரதேசதங்களிலே இரர்னுவக் கட்டுப்பாட்டில் நடைபெறும் விடயங்கள் கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அரசிற்கு நாங்கள் செல்ல வேண்டுமென்றிருந்த நிலையில் அரசாங்கமே அழைத்ததால் நாம் சென்று சந்தித்து அதைக் கூறினோம்.
ஆந்தச் சந்திப்பின் பின்னர் இன்னொரு சந்தர்ப்பமும் எமக்கு ஏற்பட்டது. அதாவது கூட்டம் காலை நடைபெற்று முடிந்தவுடன் மலையில் எங்களை மிளவும் ஒரு சந்திப்பிற்கு பிரதமர் அழைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் பசில ராஐபக்ச மற்றும் ஐpஎல்; பீரிஸ் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் கடந்த காலங்களில் இனப்பிரச்சனை விடயம் உள்ளிட்ட விடயங்களைக் கையாண்டிருக்கின்ற நிலைமையில் அவர்களிடம் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிரந்தோம். ஆக எமது மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் இந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் அரசிற்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம் என்றார்.
Post a Comment