யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரினால் எதிர்வரும் மாதம் முதல் வாரம் டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளார் 

 டெங்கு நோய்கடந்த 20 வருடமாக இலங்கையின் பல பகுதிகளிலும் பல மக்களை தாக்கி வரும் நோய் குறிப்பாக 15 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களையும் சிறுவர்களையும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தும்  இது நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோயாகும்

இந்த நோயினால் கடந்த வருடம் இலங்கையில் டெங்கின் தாக்கத்தினால் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் அதில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வருடம் எண்ணாயிரம் பேர் இந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டது எனினும்

இந்த வருடம்  மே மாதம் வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ் போதனாவைத்தியசாலைமற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது

 ஜனவரி பெப்ரவரி மாதங்களில் கூடுதலாக இந்த டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது ஏனெனில் அந்த காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகம் காணப்பட்டமையினால் குறித்த தாக்கம் அதிகரித்து காணப்பட்டது

அதேபோல் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மீண்டும் இந்த டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது குறிப்பாக யாழ்மாவட்டத்தில் கூடுதலாக சங்கானை உடும்பிராயு நீர்வேலி சுண்டுக்குளி போன்ற இடங்களில் இருந்து நோயாளர்கள் கூடுதலாக வருவதை நாங்கள் இங்கே அவதானிக்கக்கூடியதாகவுள்ளது 

எனவே இந்த டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால் மக்கள் குறிப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் இந்த நோய் நுளம்பினால் பரவுகின்ற ஒரு நோயாகும் எங்கேயாவது நல்ல நீர் தேங்கி நிற்கும்.

 ஆனால் சிரட்டை அல்லது ஜோக்கர் கப், ஐஸ்கிரீம்கப்,  தகரப்பேணிகள்,  இப்படியானவற்றினை நாங்கள் அவதானம் இல்லாமல் கண்ட இடங்களில் எறியும் போது மழை பெய்யும்போது இதில் நீர் தேங்கி நின்று  அந்த நீரில் நுளம்புகள் முட்டையிடும் அந்த முட்டை  பொரித்து 5 தொடக்கம் 10 நாட்களுக்குள் அது நுளம்பாக மாற்றமடைந்து அந்த நுளம்பு முட்டையில் டெங்கு வைரஸ் இருக்கலாம் அந்து நுளம்பு இந்த வைரஸினை காவிக்கொண்டு மக்களினை கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகின்றது 

இந்த நுளம்புகள் ஆனது குறிப்பாக மாலை வேளைகளில் தான் அதிகமாக மக்களை தேடிச்சென்று கடிக்கின்றது எனவே மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாலை நேரங்களில் தமது அறையின் கதவுகளை சாத்தி விட்டு இருப்பது மிகவும் சிறந்தது.

 அல்லாவிட்டால் கொல்லி மருந்துகள் மற்றும் நுளம்புத்திரி போன்றவற்றினை கொளுத்தி வீடுகளில் வைப்பதன் மூலம் குறித்த எறும்பு தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள் வதன் மூலம் டெங்கு நோயிலிருந்து தங்களை தப்பிக்க  முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

எனவே இந்த நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டுமே யானால் எமது சுற்றுச் சூழலை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக நுளம்பு பரவக்கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம் தேவை எனவே மக்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post