நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி - ரவிகரன் - Yarl Voice நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி - ரவிகரன் - Yarl Voice

நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி - ரவிகரன்


“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலித்தேன்..”

என்று சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று காலை ஒழுங்கமைக்கப்பட்ட உயிர் நீத்த எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நடைபெறும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post