கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் அதிக உயிரிழப்பை சந்தித்த இரண்டாவது நாடாக பிரேஸில் மாறியுள்ளது.
அண்மைய புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் 41 ஆயிரத்து 901பேர் பெருந் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த பிரித்தானியாவை பின்தள்ளி பிரேஸில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரித்தானியாவில் 41 ஆயிரத்து 481பேர் உயிரிழந்துள்ளனர்.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 21 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றுக்கு மொத்தமாக, 8 இலட்சத்து 29 ஆயிரத்து 902பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 24,253பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 843பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 391,309பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 396,692பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.
Post a Comment