கூட்டமைப்பினை சவாலுக்கு அழைக்கிறார் கணேஸ்? - Yarl Voice கூட்டமைப்பினை சவாலுக்கு அழைக்கிறார் கணேஸ்? - Yarl Voice

கூட்டமைப்பினை சவாலுக்கு அழைக்கிறார் கணேஸ்?


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்த காலத்திலும் சரி வடமாகாணசபை ஆட்சி காலத்திலும் நடந்த ஊழல்கள் தொடர்பில் பேச தயாராக இல்லாதிருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பினை சேர்ந்த கணேஸ் வேலாயுதம்.
நாடறிந்த சமூக சேவகரான அவர் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சக்தி அமைப்பின் தொலைபேசி சின்னத்தில் தேர்தல் களம் குதித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் 300 கோடி நிதி அள்ளி கொட்டி ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குடிநீர் திட்டம் இடைநடுவில் நிற்கின்றது.
யாழ்ப்பாணத்து மக்களது வாக்குகளிற்கு அலையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரர் ஒருவர் கிளிநொச்சி தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு விடுவிக்க தடுத்து வருகின்றார்.
இரணைமடு முறைகேடு தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு அறிக்கையினை கடைசி வரையில் வெளியிடாது முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவன் மூடி மறைத்திருந்தார்.
அதே போல வலிகாமம் வடக்கு குடிநீரில் கழிவு ஓயில் கலக்கப்பட்ட விவகாரத்தையும் மூடி மறைத்து ஆளாளுக்கு அறிக்கை விடுத்தார்கள்.இறுதியில் தென்னிலங்கையினை சேர்ந்த சுற்று சூழலியாளரே கழிவு ஓயில் கலந்தமையினை அம்பலப்படுத்தினார்.
அதே போன்று வடமாகாணசபையின் மிகப்பெரிய ஊழலான நெல்சிப் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணை  ஏழுவருடங்களாகவும் கிடப்பில் கிடக்கின்றது.
இவை தொடர்பில் எல்லாம் பேசுவதற்கு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் எவரேனும் தயாராக உள்ளார்களாவெனவும் கணேஸ் வேலாயுதம் சவால் விடுத்துள்ளார்.

தனது தேர்தல் அரசியல் பற்றி விளக்குகையில் வடக்கு மாகாணத்தின் கல்வி விளையாட்டு விவசாயம் கடற்றொழில் போன்ற துறைகளை ஊழல் இல்லாத வகையில் முன்னேற்றுவதற்காகவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். மக்கள் என்னை அனுப்புகின்றபோது இவற்றைச் செய்து முடிப்பேன் அடுத்த முறை தேர்தலுக்கு எத்தகைய விளம்பரங்களும் இல்லாமலேயே எனது செயற்பாட்டைப் பார்த்து மக்களே என்னைப் பாராளுமன்றம் அனுப்புவார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் கல்வியானது பின் தங்கிய மாகாணமாக ஆகிவிட்டது. இதனை உடனடியாக முன்னேற்றவேண்டும். அது போல் விளையாட்டுத் துறையில் எமது மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்ற போதும் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர சர்வதேச ரீதியில் சென்று சாதனை நிலைநாட்டவில்லை. ஆனால் எனது எண்ணம் வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத் துறையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கு உதவுவதே எனது நோக்கமாகவுள்ளது. அதுபோன்று விவசாயம் கடற்றொழில் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி இரு தொழில் துறைகளையும் முன்னேற்றவேண்டிய தேவையின் அவசியமுள்ளது. இங்குள்ள அரசியல்வாதிகள் தமக்கான தேவைகளைத்தான் நிறைவேற்றிக்கொள்கின்றார்களே தவிர மக்களுக்காக எதையும் செய்யவில்லை இவர்களுடன் சேர்ந்தவர்களாகவே அரசாங்க அதிகாரிகளும் செயற்படுகிறார்கள்.

எமது காலத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வாறு அந்தத் திட்டங்கள் செய்யப்படுகின்றது எத்தகைய நிதி செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் என்ன என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துவதுடன் , வாகன அனுமதிப்பத்திரம் உட்பட அனைத்து வகையான சலுகைகளையும் மக்களுக்காகவே செலவு செய்வேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post