போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த விதம் தொடர்பாக வெடித்தது சர்ச்சை. - Yarl Voice போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த விதம் தொடர்பாக வெடித்தது சர்ச்சை. - Yarl Voice

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த விதம் தொடர்பாக வெடித்தது சர்ச்சை.

கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நடாத்த திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றால் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது 
அங்கு வந்த பொலிஸார் போராட்டகாரர்களை கைது செய்தனர். 

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பொலிஸார் வலுகட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லாமல் ஆண் பொலிஸார் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றியமை தொடர்பான காணொளி வெளியாகியதையடுத்து இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொட‌ர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post