சற்று முன்னா் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் இலக்காகி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.
முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் உயிரிழந்தார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பளை கெற்பேலியை சேர்ந்த
24 வயதுடைய இராமலிங்கம் திரவியம் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
Post a Comment