கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் இரத்து செய்யப்படுகிறது.
வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment