இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
மூன்று மாதங்களுக்கும் மேலான காலப்பகுதிக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளதால் இரசிகர்கள் இப்போட்டியினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இரசிகர்கள் இன்றி இப்போட்டி சௌத்தம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேஸன் ஹோல்டரும் தலைமை தாங்கவுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதியும், மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜூலை 24ஆம் திகதியும் மன்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளன.
Post a Comment