நல்லூர் ஆலய திருவிழாவிற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice நல்லூர் ஆலய திருவிழாவிற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice

நல்லூர் ஆலய திருவிழாவிற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அரச அதிபர் கோரிக்கை


நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம்  தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர்

நாளை  நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ் மாவட்டம் கொரோனா  கட்டுப்பாடு  பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது


இந்த சூழ்நிலையிலே யாழ் குடாநாட்டில் நிறைய ஆலயங்களில் திருவிழாக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது அதேபோலத்தான் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது இந்த நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் போலீஸ் ராணுவத்துடன்இணைந்து நாங்கள்  மேற்கொண்டுள்ளோம்

 அவை அனைத்தும் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளது எனினும் தற்போது பக்தர்களுடைய வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வழமையாக நல்லூர் ஆலய உற்சவத்திற்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவது வழமை அதாவது லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு திருவிழாவாக நல்லூர் ஆலய திருவிழாகாணப்படுகின்றது 

எனினும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் இந்த நல்லூர் ஆலய உற்சவத்தினை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்

 வழமைபோன்றுஇன்று தொடக்கம்
வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன  அதேபோல கடைகள் வியாபார நிலையங்களிற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது அன்னதானம் காவடி மற்றும்  பக்தர்களின் வழிபாட்டு முறைகள் சிலவற்றிற்கும்  இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது

 எனினும் நல்லூர் ஆலய உற்சவத்தினை சிறப்பாக மேற்கொள்வதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது 

ஆலயத்திற்கு உள்ளும் வெளியிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அதேபோல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களின் வருகையினை  எதிர்பார்க்கின்றோம் 

எனவே வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கபடுவார்கள்அதேபோல் இந்த ஆலய திருவிழாவின் போது பெரும் திரளாக மக்கள் கூடி  சமூகத்தொற்று ஏற்படா வண்ணம் ஆலய உற்சவத்தில் மக்கள்கலந்து கொள்வதன் மூலமாகவே நல்லூர் ஆலய உற்சவத்தினை  தொடர்ச்சியாக 25 நாட்களும் எந்தவித தடையுமின்றி நடாத்த முடியும் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் போலீசாரின் செயற்பாட்டிற்கு தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை கட்டாயம் வழங்க வேண்டும் ஏனென்றால் அவர்களால் சில பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதனையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

பொதுமக்கள் ஆலய உற்சவத்தினை தொலைக்காட்சி வழியாக வீடுகளிலிருந்து நேரடியாகவும் அதனைப் பார்க்க முடியும் அதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன 

யாழ்ப்பாண  நகரம்  சனநெரிசல் கூடியஒரு   பிரதேசம் அதே நேரத்தில்  கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ள  பிரதேசம்  இந்த ஆலய உற்சவத்தில் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமலும் அதனைப் பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு எம் அனைவரையும் சார்ந்ததே எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post