யாழ் சாவகச்சேரியில் கள்ள வாக்கு பதிவு - அப் பகுதியில் தொடரும் பரபரப்பு - Yarl Voice யாழ் சாவகச்சேரியில் கள்ள வாக்கு பதிவு - அப் பகுதியில் தொடரும் பரபரப்பு - Yarl Voice

யாழ் சாவகச்சேரியில் கள்ள வாக்கு பதிவு - அப் பகுதியில் தொடரும் பரபரப்பு


யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார்.

அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள்இ பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post