யாழில் இரானுவமும் பொலிஸாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் - Yarl Voice யாழில் இரானுவமும் பொலிஸாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் - Yarl Voice

யாழில் இரானுவமும் பொலிஸாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்


யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து இன்று காலை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யானை தந்தம்இவாள்இகெரோயின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இன்று காலை திடீரென இராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யானை தந்தம் ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரும்  கூரிய வாள் ஒன்றை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவருமாக இன்றைய சுற்றிவளைப்பில் மொத்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுஉடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post