முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள அவரது நினைவு தூபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவு தின நிகழ்வுகள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.சர்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் மறைந்த அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வனும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்இ யாழ். பல்கலைக்கழக துனைவேந்தர் ஸ்ரீபற்குணராஜாஇ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாஇ வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்இ உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள்இ கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment