தடைகளை தாண்டியும் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் - ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு - Yarl Voice தடைகளை தாண்டியும் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் - ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு - Yarl Voice

தடைகளை தாண்டியும் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் - ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் அறிவிப்பு


தமிழ் மக்களின் அடிப்படை உாிமைகளை வலியுறுத்தி தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடாத்தப்பட விருந்த உணவு ஒறுப்பு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடக்கும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கட்சிகளின் சாா்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா கூறியுள்ளாா்.

நீதிமன்ற தடைக்கட்டளையை தொடா்ந்து நேற்று மாலை கூடிய தமிழ்தேசிய கட்சிகளின் தலைவா்கள்இ பிரதிநிதிகள் நீதிமன்ற தடையை தொடா்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக கலந்துரையாடியிருந்தனா். கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்இ

தமிழ் மக்களின் அடிப்படை உாிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான உாிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி இன்று காலை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீா்மானித்திருந்தோம். 

ஆனாலும் நேற்று மதியம் வல்வெட்டித்துறை பொலிஸாா் பருத்துறை நீதிமன்றில் tpண்ணப்பம் ஒன்றை சமா்பித்து தடை கட்டளை ஒன்றை பெற்றிருக்கின்றாா். கொரோனா ஆபத்தை சுட்டிக்காட்டி பொலிஸாா் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியிருக்கின்றது.

இந்த தடை கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாதபோதும் உண்ணாவிரத போராட்டத்திற் கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உாிய மாியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம். 

இந்த பின்னணியில் திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடா்பில்  ஒரு திட்டவட்டமான தீா்மானத்தை எடுத்துள்ளோம். அதனடிப்படையில் நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் அதற்கான மாியாதைகளுடன் திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டு எமது உணவு ஒறுப்பு போராட்டம் நடத்தப்படும்.

அதேவேளை முன்னா் அறிவித்ததைபோல் 28ம் திகதி வடகிழக்கு தழுவிய பூரண ஹா்த்தாலுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பை இந்த சந்தா்ப்பத்தில் நாங்கள் வேண்டி நிற்கிறோம் என்றாா்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post