யாழிற்கான 1200 கோடி ரூபா திட்டங்கள் கைநழுவிச் செல்லும் அவல நிலை - கட்டுமாண பணிகளிலிருந்து விலகும் ஆசிய அபிவிருத்தி வங்கி - Yarl Voice யாழிற்கான 1200 கோடி ரூபா திட்டங்கள் கைநழுவிச் செல்லும் அவல நிலை - கட்டுமாண பணிகளிலிருந்து விலகும் ஆசிய அபிவிருத்தி வங்கி - Yarl Voice

யாழிற்கான 1200 கோடி ரூபா திட்டங்கள் கைநழுவிச் செல்லும் அவல நிலை - கட்டுமாண பணிகளிலிருந்து விலகும் ஆசிய அபிவிருத்தி வங்கி




யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 மில்லியன் டொலர் உதவியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட பணிகள் மாவட்டத்தின் அசமந்தம் காரணமாக முழுமையாக கை நழுவிப் போவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண நகரின் மத்தியில் 6 கட்டப் பணிகளாக நகரில் கழிவு நீர் வாய்க்கால் , வீதிகள் , பூங்காக்கள் , குளங்கள் ஆகியவற்றுடன் மேலும் இரு பணிகளாக 6 பிரதான திட்டங்களும் ஒருங்கிணைந்த வகையில்  ஆசிய அபிவிருத்தி வங்கி 55 மில்லியன் டொலர் உதவி புரியும் . இந்த  திட்டத்திற்கு இலங்கை அரசு 10 மில்லியன் டொலர் முதலிடும் என திட்டம் தயாரிக்கும்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின்  ஒவ்வொரு பணிகளிற்கும் தனித் தனியான திட்டம் தயாரிக்கப்பட்டபோது திட்டங்களை தயாரிப்பதற்கான அடிப்படைத் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களினால் திட்டம் தயாரிக்கும் பணி  தாமதம் கண்டது. இருந்தபோதும் மாநகர சபையின் எல்லைப் பகுதிக்குள் இதன்  தேவை கருதி பல கட்ட அழுத்தம் காரணமாக திட்டமுன்மொழிவு கொண்டு  செல்லப்பட்டபோதும் அமைச்சினதும் மத்திய அரசின் அதிகாரிகளினதும் அசமந்தம் காரணமாக 2016 முதல் இன்றுவரை பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. இதேநேரம் வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் இந்த திட்டம் தொடர்பாக  சுட்டிக்காட்டப்பட்டபோதும் மாகாண சபையும் போதிய கருசணை கொண்டிருக்கவில்லை.

இக்காலப்பகுதியில்  யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஒதுக்கிய மூலோபாய திட்ட  நிதியில் இருந்து  9 மில்லியன் டொலர் நிதி கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பணிக்கு திருப்பப்பட்டது. இருப்பினும் பணம் திருப்பிய விடயம் அப்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தபோது குடாநாட்டின் பணி ஆரம்பித்தால் அந்த நிதியை மீளப் பெற்றுத்தர முடியும் என அதிகாரிகள் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  உறுதி அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 

இவ்வாறு இன்றுவரை எந்தப் பணியுமே ஆரம்பிக்காத நிலையில் எதிர் வரும் மாதங்கள் மழை காலம் என்பதோடு தற்போடு கொரோனா காலம் என்பதனையும் காரணம் காட்டி  யாழ்ப்பாணத்தில் இந்த பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசின் அனுமதியோ அல்லது  அமைச்சரவை ஒப்புதலோ  கிடைக்காத நிலையில் இனியும் இந்த திட்டங்களை முன்னெடுக்க முடியாது அதனால் திட்டங்களை நிறுத்த வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அரைவாசியாக குறைக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி முதல் கட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

எமக்கு எந்தவொரு தகவலும் உறுதிபடத் தெரிவிக்காதபோதும் இவ்வாறான ஒரு தகவல் கிட்டியதனால் மாநாகர சபை சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சாவை  சந்திக்க ஓர் சந்தர்ப்பம் கேட்டு கடிதம் எருதியுள்ளோம். அத்தோடு இந்த திட்டத்தை முழுமையாக பெற்றுத் தருமாறும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்படுகின்றது. எனப் பதிலளித்தார்.

இதே நேரம் இத் திட்டத்தினை முன்னெடுக்கும் நகர அபிவிருத்தி வீட்டு வசதிகள் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது , மேற்படி தகவலை வாய் வழியாக கூறியுள்ளனர். இருப்பினும் இறுதி முடிவாக அறிவிக்கப்படவில்லை. அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது. இருப்பினும் ஓர் திட்டம் நிறுத்தப்படலாம் எனத் தெரிவிப்பதனால் அதிகாரிகளிற்கும் அப்பால் அரசியல் ரீதியாகவே முயற்சிக்க வேண்டும். எனப் பதிலளித்தனர்.

முன்பிருந்த அரசின் காலத்தில் முன்னைய அதிகாரிகளும் அப்போதைய அரசியல் வாதிகளும் பாடுபட்டு  தயாரிக்கப்பட்ட திட்டம் வெறும் பேப்பர் அளவோடு கை நழுவிப்போகுமா என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. 
இவ்வாறு ஏற்பட்ட கால தாமதங்காரணமாக திட்டம் தடைப்படும் ஆபத்து தொடர்பில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

உண்மையில் இந்த மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து திட்ட இணைப்பாளரதும் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தினதும் முழுமையான தாமதம் காரணமாகவே தற்போது இந்த அவலம் நிகழ்கின்றது. இருப்பினும் அதனை பெறுவதற்கே முயற்சிக்வின்றோம் அவ்வாறு அன்றி அது கை நழுவுமாக இருந்தால் அந்த திட்ட இணைப்பாளரும் அவர்களை நியமித்த அமைச்சுமே இதற்கு பொறுப்பாளிகள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post