கொரோனா அச்சத்தால் புங்குடுதீவில் 20 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice கொரோனா அச்சத்தால் புங்குடுதீவில் 20 பேர் சுய தனிமைப்படுத்தல் - Yarl Voice

கொரோனா அச்சத்தால் புங்குடுதீவில் 20 பேர் சுய தனிமைப்படுத்தல்



புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அவர் கடந்த 4 நாள்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பமும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தொடர்புடையவர்களும் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இன்று மாலை பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளது.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி

0/Post a Comment/Comments

Previous Post Next Post