வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு - சுன்னாகத்தில் சம்பவம் - Yarl Voice வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு - சுன்னாகத்தில் சம்பவம் - Yarl Voice

வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு - சுன்னாகத்தில் சம்பவம்




யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.ஆட்கள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து குறித்த வயோதிபர் பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post