யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி





யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவுத்துள்ளார்.

அதாவது இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 308 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக  Covid-19 தொற்று ஒவருக்கும்  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .


இருப்பினும் இன்றைய பரிசோதனையில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருக்கின்ற 8 பேருக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெறுபவர்.

 மன்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவர்.

விடத்தல்பளை தனிமைப்படுத்த நிலையத்தைச் சேர்ந்த 2 பேர்

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள்  தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 11 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post