கொரோனோ வைரஸ் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice கொரோனோ வைரஸ் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice

கொரோனோ வைரஸ் தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்


கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ள டெட்ரோஸ் ஆதனாம்இ இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்இ தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளில் 9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ளன.

இந்நிலையில்இ சோதனை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு மூலம் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post