போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய வடக்கு ஆளுநர் - Yarl Voice போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய வடக்கு ஆளுநர் - Yarl Voice

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய வடக்கு ஆளுநர்




போக்குவரத்து அதிகாரசபை உழியர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எச்.எம் சாள்ர்ஸ் நியமனம் வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி நிகழ்வானது போக்குவரத்து அதிகாரசபையில் ஏற்கனவே தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நேரம் கணிப்போர் ஆகியோருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், போக்குவரத்து அதிகாரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில் மிக முக்கியமான பல சிரமத்துக்கும் சிக்கல்களுக்கும் மத்தியிலேதான் நான் இந்த நியமனத்தை வழங்க அனுமதித்திருந்தேன். தனியார் போக்குவரத்து துறையினர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து சபையினருக்குமிடையே காணப்படும் முரண்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.

 இந்த இரு துறையினருக்குமிடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த சேவையை வழங்கவேண்டுமெனவும் அந்நேர அட்டவணையின்படி சேவைகள் நடத்தப்படுகிறதா  என்பதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுகொண்டார்.

 இவை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் அதற்க்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் தலைவரும் அவர்சார்ந்த உத்தியோகத்தருமே. அத்தோடு தமது கடமைகளை நேர்மையுடன் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post