வடக்கில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice வடக்கில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

வடக்கில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி



வடக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 226 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post