யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

யாழ் போதனாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு




யாழ் போதனா வைத்தியசாலைநில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக  Covid-19 தொற்று ஒவருக்கும்  தொற்று   இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும் இன்றைய பரிசோதனையில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் இருக்கின்ற 8 பேருக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள்  தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 14 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சுஅறிவுறுத்தல்களையும்  பின்பற்றவும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post