மாநகர சபையின் மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்த முதல்வர் ஆர்னோலட் - Yarl Voice மாநகர சபையின் மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்த முதல்வர் ஆர்னோலட் - Yarl Voice

மாநகர சபையின் மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்த முதல்வர் ஆர்னோலட்


வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம் என்ற எண்ணக்கருவின் கீழ் 'துருலிய லங்கா' தேசிய மரநடுகை நிகழச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாநகரசபையின் மர நடுகை நிகழ்வு யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள யாழ் மாநகரக் காணியில் இடம்பெற்றது.

தேசிய வேலைத்திட்டமான இம் மரநடுகை நிகழ்வு மிகவும் சிறப்பாக மாநகரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் மாநகர பிரதிமுதல்வர் மாநகர ஆணையாளர் மாநகர பொறியியலாளர் துறைசார் அதிகாரிகள் மாநகர தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் வேலைப்பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்


.

0/Post a Comment/Comments

Previous Post Next Post