சீரற்ற காலநிலை காரணமாக 23 304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் யாழில் பாதிப்பு - நிஷா புயல் தாக்கத்தின் பின்னர் அதிகளவான பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு - Yarl Voice சீரற்ற காலநிலை காரணமாக 23 304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் யாழில் பாதிப்பு - நிஷா புயல் தாக்கத்தின் பின்னர் அதிகளவான பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு - Yarl Voice

சீரற்ற காலநிலை காரணமாக 23 304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் யாழில் பாதிப்பு - நிஷா புயல் தாக்கத்தின் பின்னர் அதிகளவான பாதிப்பு என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு




யாழில் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
 கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர்  தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக   யாழ் மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்


கடந்த சில தினங்களாக ஏற்பட்ட தாழமுக்கத்தினை தொடர்ந்து ஏற்பட்ட புரவி புயல் மற்றும்  அதனை தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது 

புரெவி  சூறாவளிதாக்கம் மற்றும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை23304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 

மேலும் குறித்த  சீரற்ற காலநிலையின் தாக்கத்தின்காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதோடு ஆறுபேர் காயம் அடைந்துள்ளார்கள்

  சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை 94 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது 3024 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மற்றும் சிறு மற்றும் மத்திய முயற்சியாளர்கள் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 27 வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன தற்போது இருபத்தொரு இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் கடந்த 2008 ம் ஆண்டு நிஷா புயலினால்ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர்  தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக   யாழ் மாவட்டத்தில்பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post