யாழ்ப்பாணத்தில் இன்றும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உடுவிலில் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 9 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்கு உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கும் ஆக ஒன்பது பேருக்கு மாத்திரமே இன்றைய பரிசோதனை தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment